Wednesday, April 17, 2013

IPL - திருவிழா



சிறந்த டைரக்டரின் கைவண்ணத்தில் IPL சினிமாவின் திரைக்கதை அட்டகாசமாக செல்கிறது.... ஜெயிக்கும் அணிகள் தோற்பதும்.... தோற்கும் அணிகள் ஜெயிப்பதுமான சீன்கள் சிறப்பாக செதுக்க படுகின்றன... சென்னை அணியின் மேட்சுகள் கடைசியாக வருகின்றன.... செமி பைனலுக்கு கொண்டு செல்லபடவேண்டுமே....  இதிலும் தமிழ் போராளிகளின் அச்சுறுத்தலுக்கிணங்கி இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட தடை செய்யப்பட்டுள்ளது.... ஆனால் இந்தியாவில் விளையாடலாமாம்.... தமிழன் தன்னை தானே ஒதுக்கி கொள்கிறான்.... பாகிஸ்தான் இந்தியாவில் விளையாட கூடாது... ஒரு மாநிலத்தில் மட்டும் அல்ல.... தமிழன் அவ்ளோ பெரிய அப்பா டக்கர் எனில் தமிழ் நாட்டை விட்டு எங்கேயும் செல்லாமல் தமிழ் நாட்டிலேயே பொழப்ப பாக்கணும்.... மத்த ஊர்ல போய் சம்பாதிக்கலாமாம்.... ஆனால் தமிழ் நாட்டுக்கென தனி சட்டங்கள் வேணுமாம்.... உலக அளவில அதிகளவில் வெளியூர்களில் பிழைக்கும் இனம் தமிழ் இனமும், மலையாள இனமுமாகத்தான் இருக்கும்.....

என்னமோ போங்க போனதடவை பெங்கால் முதல்வர் கொல்கத்தாவின் வெற்றியை அரசு வெற்றி ஆக்கி அரசியல் ஆக்கினார்... தமிழ் நாடும் இம்முறை பங்கேற்கிறது....

Tuesday, April 16, 2013

புரட்சி



மக்கள் புரட்சி, மாணவர் புரட்சி, பத்திரிக்கை புரட்சி, தலைவர்கள் புரட்சி, பசுமை புரட்சி, விஞ்ஞான புரட்சி, கணினி புரட்சி இவ்வழியே இந்த புரட்சிகளுக்கு பின் இந்த டிகேடின் இணையற்ற புரட்சி ஆரம்பித்திருக்கிறது.... அதுதான் இணைய புரட்சி.......

இந்த புரட்சியாளர்கள் மிகவும் கோபக்காரர்கள்... மக்கள் பிரச்சனைக்காக பொங்குபவர்கள்.... சே குவாரவை டிசர்ட்டாகவோ, டிபியாகவோ வைத்திருப்பார்கள்.... அதுவும் தமிழ் இணைய புரட்சியாளர்களுக்கு இணையான உலக புரட்சியாளர்கள் யாருமே இல்லை எனலாம்... அவர்களுக்கு தேவை தினம் ஒரு மக்கள் பிரசனை.... அது கூடங்குளமாகட்டும், அம்மா ஆட்சியாகட்டும், அய்யாவின் முன்னாள் ஆட்சியாகட்டும் அல்லது பரதேசி படம் ஆகட்டும்.... ஏதோ ஒருவகையில் தங்கள் புரட்சி கருத்துகளை வெளியிட்டு மக்களை முறுக்கேற செய்வர்.... இவர்களுக்கான நீண்ட நாள் புரட்சி திட்டம் இலங்கை தமிழர்கள்..... எப்பெல்லாம் பொழுது போகவில்லையோ அப்பெல்லாம் இந்த பிரசினையை எதாவது ஒரு ரூபத்தில் கையில் எடுத்து பொங்கி விடுவார்கள்.... பீ கேர்ஃபுல்....  யோசித்து பாருங்கள்... மாணவர் போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன ஆனது.....

ஆனாலும் இந்த இணைய புரட்சியாளர்களுக்கு அந்த நேரத்தில் தங்கள் புரட்சி கருத்துகளை அரங்கேற்ற அப்பிரசினை பெரிய அளவில் உதவியது....

இந்த புரட்சிகளால் மின்மிகு, போதையில்லா, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் தமிழகமாக 2020ல் தமிழகம் முன்னோடி தமிழ் நாடாக மாறப்போவது உறுதி