Monday, May 27, 2013

ஷீரடி விஜயம்



சனிக்கிழமை திடீர் விசிட்டாக ஷீரடி சென்று வந்தோம்... காலையில் கிளம்பி மதியம் தரிசனம் முடித்து இரவே திரும்பிய விசிட்.... கூட்டம் அதிகம்... ஆனாலும் கூட்டத்தை கோவில் நிர்வாகமும் ஊர் மக்களும் சமாளிக்கும் விதம் தென்னக கோவில் நிர்வாகிகளும் ஊர் மக்களும் ஒருவாரம் தங்கியிருந்து கற்று கொள்ள வேண்டிய பாடம்.... க்யூவில் நின்றால் 1 - 1 1/2 மணி நேரத்தில் தரிசனம் முடிக்கும் அளவு ஒரு அருமையான ஏற்பாடு செய்திருந்தார்கள்.... க்யூ நகரும் வழியில் முதலுதவி குழு, தண்ணீர் விநியோகம், ஏர் கூலர்ஸ், டாய்லட் வசதிகள் சுத்தமாகவும் சுகாரதாரமாகவும் அமைத்திருந்தனர்..... பாபாவின் தரிசன இடத்தில் தள்ளு முல்லுகள் இல்லை.... திவ்ய தரிசனம்.... முக்கியமான விஷயம் அர்ச்சனை பொருட்களை அதிக விலையில் தலையில் கட்டும் அராஜக கும்பல் இல்லை.... இஷ்டத்திற்கு விலை வைக்கும் ஹோட்டல்க‌ளும் இல்லை.... சுவையான தரமான மதிய உணவு 50 ரூபாயில் கிடைத்தது ஒரு தரமான ஹோட்டலில்....