Thursday, June 20, 2013

எண்டமூரி வீரேந்திரநாத்

சமீபத்தில் எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய சில நாவல்களை படித்தேன்... எல்லாமே முப்பது வருஷத்துக்கு முந்தைய நாவல்கள்... ஆனால் இன்னமும் ஃப்ரெஷ்ஷாக இருக்கின்றன‌

துளசிதளம் - தமிழர்களுக்கு தெரிந்த நாவல்.... அவரது டாப் டென்னில் டாப்பாக இருக்கும் நாவல் இதுதான் என்பது என் அபிப்ராயம்

மீண்டும் துளசி - துளசிதளத்தின் சீக்வல்... அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் விறுவிறுப்பாகவே இருந்தது....

காதல் செக் - செஸ் விளையாட்டை மையப்படுத்தி எழுதப்பட்ட சூப்பர் நாவல்.... பக்கங்கள் பறக்கும்

சாரதாவின் டைரி - ஒரு சாமானியன் இரு சாரதாக்களால் சந்திக்கும் பிரசினைகளை கொண்டு எழுதப்பட்டது.... ஒரு ஆந்திர மசாலா சினிமாவை பார்த்த எஃபெக்ட் கிடைக்கும்

காதலெனும் தீவினிலே - ஒரு வித்யாசமான கதை படித்த திருப்தி

காதலிக்கிறாள் சரிதா - படித்ததிலே மிகவும் சுமாரான கதை

No comments:

Post a Comment