Monday, January 23, 2012

மெளனகுரு

தியேட்டரில் மிஸ் செய்ததால் கொஞ்சம் லேட்டாக பார்த்த படம்.... அஞ்சாதேவிற்கு பிறகு எனக்கு பிடித்த மிக தெளிவான காட்சி அமைப்புகள் கொண்ட ஒரு நீட் மூவி.... மிக சிறப்பான படம்...

ஆனாலும் எனக்கு சில கேள்விகள்...

1) சினிமாவில் ஒரு சாதாரண ஆசாமி ஏன் கொஞ்சம் அரை கிறுக்கனாக சித்தரிக்க படுகிறார்... ராம் ஜீவா, கற்றது தமிழ் ஜீவா, மெளனகுரு அருள் போன்றோர்.... இப்படத்தில் அருள் ஒரு டெலிபோன் பூத் உடைக்கு சீன் எல்லாம் தேவையே இல்லை... ஒரு சதாரண ஸ்டூடண்ட் சதாரணமாகவே இருந்து ஒரு அசாதாரண நிலைக்கு கன்வெர்ட் ஆவதை போல் ஏன் திரைக்கதை அமைப்பதில்லை....

2) ரன் மாதவன் ஒரு நல்ல உதாரணம்... சதாரண ஸ்டூடண்ட்,,, அசாதாரண சூழ்நிலை... சிறப்பாக கையாளபட்டிருக்கும்.... அவன் அவன் பிரச்சனையை மட்டுமே எதிர் கொள்வான்... சூப்பர் ஹீரோ எல்லாம் ஆக மாட்டான்...

3) சாதாரண மனிதனின் வாழ்வை பிரதிபலிக்கும் படங்கள் தமிழில் இருக்கிறதா...

விவாதிக்கலாம்

No comments:

Post a Comment