நண்பன் படம் சார்பில் ஒரு பதிவர் ஒரு பெரிய பூகம்பத்தை கிளப்பி விட்டுட்டார்....
என் சார்பில் சில கருத்துக்கள்.... ஏற்றத்தாழ்வு என்பது உலகம் தொடங்கிய நாளில் இருந்து இருக்கிறது... மனிதன், மிருகம், மரம், செடி, கொடி, மண் எல்லாவற்றிலும் கலந்திருக்கிறது... சாதி மட்டுமல்ல... சாதீயே இல்லாத இடங்களிலும் வேறு விதமான் ஏற்றதாழ்வு இருந்து கொண்டுதான் இருக்கிறது....
ஆனாலும் சாதனையாளர்கள் இதையெல்லாம் மீறி வெளியே வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்... உலகளவில், தேசிய அளவில், மாநில அளவில் சாதனையாளர்கள் சாதி அடையாளங்கள் மீறித்தான் மிளிர்ந்து கொண்டிருக்கிறார்கள்....
சாதியினால் தற்கொலை செய்து கொள்ளும் முட்டாள்களை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது... நமது நாட்டில் மட்டும்தான் எதற்கும் அடுத்தவர் மேல் பழிபோடும் மனோபாவம் பெருகுகிறது.... எல்லாவற்றையும் ஒரு குறுகிய மனோபாவத்தில் சிந்திக்க பழகி விடுகிறோம்...
வாழ வக்கில்லாமல் செத்து தொலைபவர்கள் வெவ்வேறு உணர்ச்சிகளை கிளப்பி விட்டு விடுகிறார்கள்... இலங்கை தமிழர்களுக்காக, ஒய் எஸ் ஆர் ரெட்டிக்காக, தூக்கு தண்டனையை எதிர்த்து... இப்படி தற்கொலை செய்து கொண்டவர்கள் என்ன சாதீய பிண்ணனியிலா செத்தார்கள்.... நம்மவர்களுக்கு மேக்ஸிமம் டைம் பாஸே தற்கொலைதான்....
எளிமையாக சொல்வதென்றால் தற்கொலை செய்து கொள்பவன் என்ன காரணதிற்காக செத்தான் என்று ஆராய்வதை காட்டிலும் கிடைக்கும் காரணத்தை ஏற்றுக் கொள்கிறோம்.. அதான் பிரச்சனை....
இந்த சிக்கல்களுக்கு எளிய தீர்வு,,, மக்கள் தொகை கட்டுப்பாடு, அனைவர்க்கும் உணவு, அனைவர்க்கும் இலவச கல்வி.....
மக்கள் தொகை குறைந்தாலே பல சிக்கல்கள் தீர்ந்து விடும்...
No comments:
Post a Comment