Sunday, November 18, 2012

பாலா சாஹேப் தாக்கரே



லெஜண்டரி மேன்... மும்பையில் சனிக்கிழமை நாலு மணிவாக்கில் தாக்கரே மறைந்து விட்டார் என்று அதிகாரபூர்வ செய்தி வெளியாகிறது... ஐந்து மணிவாக்கில் மும்பையே அமைதியாகிவிட்டது... மூச்சு விடும் சப்தம் கூட கேட்காத நிசப்தம் மும்பையில்... ஞாயிறும் அதே நிலைமைதான்... வீட்டு காம்பெளண்டுகளில் விளையாடும் குழந்தைகளின் சத்தம் கூட கேட்கவில்லை... அமைதி.. அமைதி... அப்படியொரு அமைதி.... எந்த சூழ்நிலையிலும் இயல்பை மாற்றாத மும்பை நிஜமாகவே ஸ்தம்பித்து விட்டது....

இறுதி ஊர்வலம் திட்டமிட்ட படி திட்டமிட்ட பாதையில் அமைதியாக முடிந்ததது. இறுதி சடங்குகளும்தான். சுமார் 20 லட்சம் பேர் திரண்ட கூட்டத்தில் வன்முறை வெடிக்காமல் அமைதி காத்ததே அந்த மாபெரும் மனிதரின் வெற்றி...

மும்பை போன்ற மாநகரில் இவ்வளவு மக்களை கவர்ந்திருக்கிறார் என்றால் நிஜமாக அவர் ஒரு மாபெரும் மனிதர்தான்....


ஆத்மா சாந்தியடைக‌

No comments:

Post a Comment