Wednesday, March 27, 2013

விமர்சனங்கள்



நேற்று ஹோலி விடுமுறையை முன்னிட்ட்டு மூன்று படங்கள் பார்த்தேன்

ஆச்சர்யங்கள்

குறைந்த பட்ஜெட்டில் நிறைவான படம்.. விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் நடிகர்களின் பங்களிப்பில் நன்றாக இருந்தது....

பிஸினஸ்மேன் - தெலுகு

மகேஷ்பாபுவின் இன்னொரு அதிரடி சரவெடி ஆக்ஷன்.... பட்டாசாக வெடித்த லாஜிக் இல்லா திரைக்கதையால் நிரம்பவே நொண்டியடித்தது... ஆனாலும் மகேஷ் மற்றும் காஜல் கூட்டணி அந்த குறையில்லாமல் பார்த்து கொண்டது.....


சந்தமாமா

அம்பாசமுத்திரம் அம்பானிக்கு பிறகு கருணாஸ் ஹீரோவாக நடித்து வெளிவந்திருக்கும் படம்.... பார்க்கவே முடியவில்லை...

Monday, March 18, 2013

தேசிய விருதுகள்



பாலாவின் பரதேசி உலக படம் என்று சொல்பவர்களுக்கு செருப்பால் அடித்தார்போல் இருந்திருக்கும்.... உள்ளூரில் யாருக்கும் பிடிக்காத படம் எப்படி உலக படம் ஆகும்.... ஆவணபடம் எடுக்கும் போது அதன் வலியை சில கற்பனை கலந்து எடுத்தால்தான் அது சிறந்த படைப்பாக வெளிவரும்... டைட்டானிக்கில் ஜாக் அன் ரோஸ் காதல் எபிசோட் அந்த சோகத்திற்கு வலு சேர்த்ததே தவிர சற்றும் பொருந்தாமலோ அல்லது துருத்தி கொண்டோ தெரியவில்லை.. அதனால்தான் டைட்டானிக் இன்றளவும் கொண்டாடபடுகிறது... ஏன் பாலாவின் பிற படைப்புகள் கூட ஒரு காதலை அடிப்படையாக கொண்டமைந்தவையே.... பாலா, மிஷ்கின் போன்றவர்கள் தமிழ் சினிமாவின் நம்பிக்கைகளாக மின்னி சட்டென மறைந்து விட்டனரோ என தோன்றுகிறது.... ராஜமெளலிக்கு இணையான தமிழ் இயக்குனர் உருவாக போவது எப்போது என்று தெரியவில்லை...

வழக்கு எண் படத்திற்கு உரிய மரியாதை கிடைத்து விட்டது.... விஷ்வரூபத்திற்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது.... அனைவருக்கும் வாழ்த்துகள்

Sunday, March 17, 2013

பரதேசி தமிழன்



இது விமர்சிக்க வேண்டிய படம்தான்.... ஒருபடம் என்ன பாதிப்புகளை ஏற்படுத்த வேண்டுமோ அது எதுவுமே நிகழ்த்தாமல் மெல்ல நகரும் ஒரு ஆவண படம்தான் இந்த பரதேசி... என்னதான் சில நடிகர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்தாலும் "ஆபரேஷன் சக்ஸஸ்... பேஷன்ட் அவுட்" என்ற நிலைதான் இந்த படத்திற்கும்.... பாலா படம் முடிந்து வரும்போது கிடைக்கும் ஒரு சிறப்பான அனுபவம் மிஸ்ஸிங்...

அங்காடி தெரு படம் பார்த்த போது ஏற்பட்ட ஒரு அதிர்ச்சி, நெகிழ்ச்சி இந்த படத்தில் சுத்தமாக இல்லை... மேலும் வேலை பார்ப்போரின் நிலை எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருக்கிறது.... என்னதான் செக்யூர்டு கம்பெனியில் வேலை பார்த்தாலும் ஏதாவது கேள்வி கேட்டால் கட்டம் கட்டி விடுகிறார்கள்.... இந்த படத்தில் காட்டியிருக்கும் விஷயங்கள் எல்லா வேலையாட்களுக்கும் எல்லா காலகட்டத்திலும் பொருந்தும்... படங்கள் தரும் இம்பாக்ட் அதிகம் என்றால் அங்காடி தெருவில் கடைகள் இன்னேரம் பூட்டபட்டிருக்கும் கூட்டம் இல்லாமல்....

எல்லோருமே விலை மலிவு என்ற சொல்லின் பின் செல்ல வேண்டியிருப்பதால்.... இந்த படம் பார்த்தேன் என்ற விஷயத்தை பதிந்து இப்பதிவை முடிக்கிறேன்...




Monday, March 11, 2013

ஏன்

திருடனாக இருந்த வியாசர் திருந்தி மகாபாரதம் எழுதினார் என்றால் கண்ணை மூடி நம்புகிறோம்

சிறந்த ஊழல்வாதியாக இருந்த முன்னாள் பீகார் முதல்வர் ரயில்வே துறையில் அசுர சாதனைகள் புரிந்த போது மனம் உவந்து பாராட்டுகிறோம்

சீர்யல்களிலோ, சினிமாவிலோ கூட வில்லன் மனம் திருந்தினால் கூட சந்தோஷபடுகிறோம்

திருந்தாத தலைவியை கூட முழு மெஜாரிட்டியில் ஆட்சியில் அமைத்து அழகு பார்க்கிறோம்

ராபின் ஹூட்களை கூட நம்புகிறோம்

ஆனால் வயதான தலைவர் இலங்கை தமிழர்களுக்காக பாடுபடுகிறேன் என்று சொன்னால் மனம் நம்ப மறுக்கிறதே ஏன்?????

Sunday, March 3, 2013

Life of Pi



மும்பை IMAXல் 150 ரூபாய்க்கு டிக்கெட் கிடைத்ததால் சென்ற படம்.... விஷூவல் எபக்ட்ஸ்க்காகவே பார்க்க வேண்டிய படமாகி விட்டது.. ஒரு நல்ல படம் பார்த்து ஒரு நல்ல படமும் எடுத்து கொண்ட திருப்தி கிடைத்தது.... படம் கீழே