சமீப காலங்களில் கூட்டம் கூட்டமாக மஞ்சக்கொடிய தூக்கிகிட்டு கூடுற வழக்கம் அதிகமாயிருச்சி... உலக அளவில் லிபியா, அமெரிக்கா, தேசிய அளவில் அன்னா சீ, தமிழகத்தில் முல்லை பெரியார், கூடங்குளம்....
கூடங்குளம் கூட்டம் சற்று வித்தியாசமானது... மின்சாரமே இல்லாத மாநிலத்தில் மின்சார உற்பத்தி வேண்டாம் என்று சமானிய மக்கள் கூடுவது விசித்திரமாக இருந்தாலும்.... ஜெ, கருணா, தோழர்கள் என எந்த அரசியல் கட்சியின் தூண்டுதலும் இன்றி இத்தனை மக்கள் இத்தனை நாட்கள் போராடுவது ஆச்சரியம்... தின'மலம்' போன்ற பத்திரிக்கைகள் மேற்கொண்ட காழ்புணர்ச்சி தாக்குதல், மத்திய அரசின் அடாவடிகளையும் சமாளித்தது பெரிய விஷயம்...
மாண்புமிகு புரட்சி தலைவியின் அறிவிப்பையும் மீறி போராடும் இவர்களை சமாளிக்க அரசு வன்முறை ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது... ஒரு வருட டாஸ்மாக் வருமானத்திலேயே அணு உலையை மூடினாலும் ஏற்படும் நஷ்டத்தை சரி பண்ணிவிடலாம் என்பதையும் மீறி அம்மா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.... அதுவும் இடைத்தேர்தல் முடிந்த அடுத்த நாளே..... மக்கள் என்ன பாவம் பண்ணினார்கள்....
ஜனநாயக சர்வாதிகாரம் என்பது இதுதான்... சுதந்திர நாடு என்பது வெறும் பேச்சளவில்தானா?.. இல்லை சுதந்திரத்தின் விளக்கம் புரியாமல் நாம்தான் அடிமைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?....
காங்கிரஸ தப்பு சொல்லியும் பிரயோஜனமில்லை... ஏன்னா வரிந்து கட்டி முன்னேற வேண்டிய பிஜேபி பிட்டு படம் பார்க்கிறதிலேயே நேரத்த செலவழிக்குது... மூணாவது அணி அமைஞ்சா அதவிட கெட்ட நேரம் எதும் கிடையாது... அதனால காங்கிரஸ விட்டா வேற கதியும் இல்ல...
ஆனா.. ஜெ போன்ற கேடு கெட்டவர்கள் அரசியல விட்டு துரத்தப்பட வேண்டும்... ஒன்னு ஒயுங்கா முன்னாடியே கூடங்குளம் கூட்டத்த கலச்சிட்டு மின் உற்பத்திய தொடங்கிருக்கனும்... இல்லாட்டி சட்டசபைல நிறைவேத்துன தீர்மானத்தயாவது மதிக்கனும்... ரெண்டும் இல்லாம இடைத்தேர்தல் முடிஞ்சதும் அறிவிப்ப வெளியிடறது என்னா ஒரு வில்லத்தனம்....
கூடங்குளம் மற்றும் தமிழர்களுக்காக இல்லாத கடவுளை வேண்டுவதை தவிர வேறு வழி தெரியாத...
ஒரு தமிழன்
No comments:
Post a Comment