கதை (அ) மூலக்கதை - பாக்யராஜ் பதறுகிற அளவுக்கு ஈயடிச்சான் காப்பி இல்லை... பாக்யராஜாலேயே இவ்வளவு சுவாரஸியமாக மறுபதிப்பு செய்திருக்க முடியாது அதுவும் சாந்தனுவை வைத்து... இப்படியாவது அவருக்கு பணமும் பப்ளிசிடி கிடைத்ததையும் நினைத்து சந்தோஷபடுமளவிற்குதான் செய்திருக்கிறார்கள்....
குறிப்பு : எந்த காப்பி பேஸ்ட் படத்திலும் ஒரிஜினல் படத்தின் 7 காட்சிகள் வரிசையாக இடம் பெறாவிட்டால் காப்பி ரைட் சட்டம் எதுவும் செய்ய முடியாது.. அந்த வகையில் பாக்யராஜால் ஒன்றும் செய்ய முடியாத அளவிற்குதான் திரைக்கதையை மாற்றி இருக்கிறார்கள்.
சந்தானம் - காற்றுள்ள போதே தூற்றி கொண்டிருக்கிறார்... அறை எண்ணில் கடவுள் படத்தில் விட்டதை சொந்த தயாரிப்பில் பிடித்துள்ளார்... தன்னை மட்டும் முன்னிறுத்தாமல் மற்றவர்களையும் முன்னிறுத்தியிருப்பதால் கமலை விட சிறந்த கலைஞனாக தெரிகிறார். மேலும் சொன்ன தேதியில் பாக்யராஜ் குழப்பியும் கூட இவர் எந்த குழப்பமும் இன்றி ரிலீஸ் செய்ததால் கமல் இவரிடம் கற்று கொள்ள வேண்டியது ஏராளம்
பவர்ஸ்டார் - இதுதான் சரியான் வழி என்று தெளிந்து கெட்டியாக பிடித்து கொண்டால் இன்னும் நல்லா வருவார்
சேது - கதை நாயகன் இவரும் கிடைத்த வாய்ப்பை புதுமுகம் என்று தெரியாத அளவிற்கு சிறப்பாக செய்துள்ளார்.... மேலும் பட வாய்ப்புகள் கிடைத்தால்தான் தெரியும் இவர் பவுசு
விசாகா - டல் திவ்யா தூள் திவ்யா ஆன பிறகு வந்திருக்கும் படம்... ஒரு பட மேஜிக்தான் என்று நினைக்கிறேன்... பார்க்கலாம்
வசனம் - சரவெடி - ஒன் லைனர்ஸ் அற்புதம்
டைரக்ஷன் - வெல்டன் மணிகண்டன் - சிம்புதேவன் போல ஒரு படம் மட்டும் ஹிட் பண்ணாமல் எல்லா படமும் ஹிட் செய்ய வாழ்த்துகிறேன்
No comments:
Post a Comment