Thursday, February 23, 2012

வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று பிறந்த நாள் விழா காணும் புரட்சி தலைவி அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Wednesday, February 22, 2012

வாழ்த்துக்கள்

வங்கி கொள்ளையர்களை என்கவுண்ட்டர் செய்த தமிழக காவல் துறைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.... இதுபோலவே மற்ற கொள்ளையர்களையும் சீக்கிரமே முடித்து விடுங்கள்....

Monday, February 20, 2012

வங்கி கொள்ளை

எல்லா நிறுவனங்களிலும்... Learning from Incident... தவறுகளில் தெரிந்து கொண்டது எனபது மிக முக்கியமான பாடம்... ஒரே தவறு மறுமுறை நடக்கக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருப்பார்கள்... அதனால்தான் இந்தியாவில் போபால் போன்ற விபரீதங்கள் 30 வருடங்களாக கண்ட்ரோலில் உள்ளன...

இது போன்ற கண்ட்ரோலில்தான் சட்டம் ஒழுங்கும் இருக்கிறது... ஆக்ஸிடன்ட், தனி நபர் குற்றங்கள் விதிவிலக்கு... உதாரணம்.. ரயில்/சாலை விபத்துக்கள்... கூடிவரும் மக்கள் தொகைக்கேற்ற நவீனம் அடையாததால் விபத்துக்கள் தொடர்கின்றன.... ஆனால் தொழிற்சாலை விபத்துக்கள் கண்ட்ரோலில் உள்ளன....

சமீபத்தில் பெருங்குடியில் வங்கி கொள்ளை, நேற்று கீழ் கட்டளையில் வங்கி கொள்ளை... நடந்தது சென்னைக்குட்பட்ட பகுதிகளில்... நிர்வாகம் என்ன செய்கிறது.... போன ஆட்சி சரியில்லை என்று அவர்களுக்கு தண்டனை அளித்தால் இந்த ஆட்சி மிக மோசமான நிர்வாகத்தை செய்து கொண்டிருக்கிறது....

எல்லா விதமான கொலை, கொள்ளை தினந்தோறும் நடக்கிறது... பேங்க் கொள்ளைகள் 30 வருடங்களுக்கு முன் கிராம வங்கிகளில் நடந்த விஷயம்... ஆனால் இப்போது சென்னையில் பரபரப்பான இடங்களில் சாதாரணமாகி விட்டது... learning from incident என்ன?

கிராமங்களில் வாழ வழியின்றி நகரங்களுக்கு குடி பெயரும் நிலை போய் சென்னை தவிர பிற நகரங்களில் பவர் கட்டால் வாழ முடியாமல் சென்னைக்கு குடி பெயரும் அபாயமான நிலை ஆரம்பித்து இருக்கிறது....

தமிழக மக்களை காப்பாற்ற வழியே இல்லையா???

Sunday, February 19, 2012

முப்பொழுதும் உன் கற்பனைகள்

சும்மாதானே உக்காந்துருக்கோம்னு தியேட்டருக்கு போனா சும்மா தெளிய தெளிய வச்சி அடிச்சி துரத்திட்டானுங்க...
திரைக்கதை எழுதும்போதே இது புட்டுக்கும்னு புரியாமலா எடுத்துருப்பானுக... அமலாபால் என்ற ஒரே ஒரு தேவதைக்காக மட்டும்தான் ஒரே ஒரு முறை மட்டும் படம் பாக்கலாம்... முரளி மகன் இன்னும் ஒரே ஒரு படம் இதே மாதிரி செலக்ட் பண்ணி நடிச்சா டிவி சீரியலுக்கு வந்து விடுவார்...

அமலா பால் மட்டும் இல்லன்னா 2 1/2 மணி நேரம் உக்கார்ந்து இருந்திருக்க முடியாது...

Thursday, February 2, 2012

தலைவர்கள்

தலைவர்கள்

ஜெ, கருணா வை விட மோசமான தலைவராக உருவாகிக் கொண்டிருக்கிறார் கேப்டன்.... தமிழகத்திற்கு வேறு ஆப்ஷனே இல்லாமல் போய் விட்டதா... தலைமை பஞ்சம் உருவாகியுள்ளது... தமிழ் நாடு இன்னும் பத்து வருடங்களில் பீகார், ஒரிஸ்ஸா நிலைமைக்கு போகும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன ....

முதலில் தமிழ் நாட்டின் அரசியல் தலைவர்களை பார்ப்போம்...

ஜெ - சொல்லத்தேவையில்லை
கருணா - சொல்லத்தேவையில்லை
விஜயகாந்த் - குடிகாரன் பேச்சுக்கு ஒரு உதாரணம்
ஸ்டாலின் - தலைமைக்கு தேவையான கட்ஸ் இல்லை
வைகோ - தொழிற்சங்க தலைமைக்கு சரியான நபர் மக்கள் தலைவராக முயற்சிப்பது ஆச்சரியம்
ராமதாஸ் - சாபதாஸாகவே இருந்தாலும் டாஸ்மாக் அவலங்களை பற்றி பேசும் ஒரே தலைவர்
திருமா, காங், எட்ஸட்ரா - சொல்லத்தேவையில்லை
கம்யூனிஸ்ட் - டீ சாப்பிடத்தான் லாயக்கு

மேலும் சிலர்
கேடி பிரதர்ஸ் - நினைத்தாலே பயமாக இருக்கிறது
கனிமொழி - ஜெ வெர்ஷன் டூ
அழகிரி - துக்ளக் தர்பார் வந்து விடும்

இந்த சார்டில் சிலர் விடுபட்டிருக்கலாம் ஆனால் இவர்கள்தான் அடுத்த பத்தாண்டிற்கான சாய்ஸ்.... என்ன செய்ய போகிறோம்.... சரியோ, தவறோ பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர், எம்ஜியார் போன்ற தலைவர்கள் ஏன் உருவாகவில்லை... கடைசி தலைவர் எம்ஜியார் உருவாகி 40 ஆண்டு காலம் ஆகி விட்டது...

அடுத்த 10 ஆண்டுகளில் நாம் என்ன செய்யப்போகிறோம்...

ஜெ மாறவில்லை

ஜெ மாறவில்லை...

ஜெ மாறவில்லை... மாற மாட்டார் என்று கூவுபவர்கள் ஒரு விஷயம் புரிந்து கொள்ள வேண்டும்.. ஜெ நல்லவர் ஆகிவிட்டார் என்று அவருக்கு ஓட்டு விழ வில்லை... அனைத்தும் கலைஞருக்கு எதிரான ஓட்டு... ஜெவை தவிர யாரும் தமிழ் நாட்டில் இல்லை என்ற நிலைமை....

இது தமிழ் நாட்டின் சாபம் என்றே சொல்ல வேண்டும்.... கடந்த 20 ஆண்டுகளில் கேரளா 4 முதல்வர்களையும், ஆந்திரா 7 முதல்வர்களையும், கர்நாடகா 9 முதல்வர்களையும் கண்ட காலகட்டத்தில் தமிழ் நாடு, ஜெ, கலைஞர், ஓபிஎஸ் என்ற மூன்று முதல்வர்களை மட்டுமே கண்டுள்ளது.. இதில் ஒபிஎஸ் கணக்கில் சேர்க்க முடியாது... ஜெ மற்றும் கலைஞர் தான்...

ஜெ மட்டும் அகம்பாவமின்றி கொஞ்சமே கொஞ்சம் நல்லாட்சி செய்திருந்தால் கலைஞர் தலை எடுத்திருக்க முடியாது... கலைஞருக்கு இருமுறை வாய்ப்பு வழங்கியது ஜெ தான்.... அதில் எந்த சந்தேகமும் இல்லை...

நேற்று சட்ட மன்றத்தில் ஜெவின் முக பாவனைகளை பார்த்த போது மிகவும் பயமாகி விட்டது... இன்னும் நாலு வருஷம் என்ன பாடு படுத்த காத்திருக்கிறார்களோ என்று