மக்கள் புரட்சி, மாணவர் புரட்சி, பத்திரிக்கை புரட்சி, தலைவர்கள் புரட்சி, பசுமை புரட்சி, விஞ்ஞான புரட்சி, கணினி புரட்சி இவ்வழியே இந்த புரட்சிகளுக்கு பின் இந்த டிகேடின் இணையற்ற புரட்சி ஆரம்பித்திருக்கிறது.... அதுதான் இணைய புரட்சி.......
இந்த புரட்சியாளர்கள் மிகவும் கோபக்காரர்கள்... மக்கள் பிரச்சனைக்காக பொங்குபவர்கள்.... சே குவாரவை டிசர்ட்டாகவோ, டிபியாகவோ வைத்திருப்பார்கள்.... அதுவும் தமிழ் இணைய புரட்சியாளர்களுக்கு இணையான உலக புரட்சியாளர்கள் யாருமே இல்லை எனலாம்... அவர்களுக்கு தேவை தினம் ஒரு மக்கள் பிரசனை.... அது கூடங்குளமாகட்டும், அம்மா ஆட்சியாகட்டும், அய்யாவின் முன்னாள் ஆட்சியாகட்டும் அல்லது பரதேசி படம் ஆகட்டும்.... ஏதோ ஒருவகையில் தங்கள் புரட்சி கருத்துகளை வெளியிட்டு மக்களை முறுக்கேற செய்வர்.... இவர்களுக்கான நீண்ட நாள் புரட்சி திட்டம் இலங்கை தமிழர்கள்..... எப்பெல்லாம் பொழுது போகவில்லையோ அப்பெல்லாம் இந்த பிரசினையை எதாவது ஒரு ரூபத்தில் கையில் எடுத்து பொங்கி விடுவார்கள்.... பீ கேர்ஃபுல்.... யோசித்து பாருங்கள்... மாணவர் போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன ஆனது.....
ஆனாலும் இந்த இணைய புரட்சியாளர்களுக்கு அந்த நேரத்தில் தங்கள் புரட்சி கருத்துகளை அரங்கேற்ற அப்பிரசினை பெரிய அளவில் உதவியது....
இந்த புரட்சிகளால் மின்மிகு, போதையில்லா, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் தமிழகமாக 2020ல் தமிழகம் முன்னோடி தமிழ் நாடாக மாறப்போவது உறுதி