Friday, December 28, 2012

2012 ஒரு பார்வை



கவர்ந்த திரைப்படங்கள்

1) காதலில் சொதப்புவது எப்படி,  ஒகே... ஓகே...., வழக்கு எண், தடையற தாக்க, நான் ஈ, பிட்சா, ந கொ ப கா, துப்பாக்கி


2) பிடித்த பாடல் - கூகுள்.. கூகுள்

3) சந்தோஷம் - வீடு வாகனம் அமைந்தது

4) வருத்தம் - வருட இறுதியில் ஏற்பட்ட மிகபெரிய பண இழப்பு

5) மிக்க வருத்தம் - மகன் ஹாஸ்பிடலில் இருந்த நாட்கள்



Sunday, December 23, 2012

பைரவி




முதல் முறையாக பார்த்தேன். தலைவர் அப்போதே தான் ஒரு சூப்பர் ஸ்டாராக போகிறவர் என்பதை நிருபித்து இருந்தார், அந்த பாம்பு சீன் ஒன்றே போதும். தலைவர் கெபாசிடியை காட்ட. மேலும் செகண்ட் ஆஃபில் பாட்ஷா கெட்டப்பில் இருந்தார். மிஸ் பண்ண கூடாத படம்

Tuesday, December 11, 2012

வாழ்த்துக்கள்



இன்று பிறந்த நாள் காணும் அன்பு தலைவருக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

Sunday, November 25, 2012

துப்பாக்கி



லேட்டாக பார்த்த காரணம் இங்கே இந்த வெள்ளிதான் ரிலீஸ்

படம் சூப்பர்.... எல்லோரும் அர்ஜூன், விஜயகாந்த் பாணி படம் என்றார்கள்.. ஆனால் அவர்களுக்கு இது செட் ஆகாது... விஜய்க்கு மட்டுமே ஆன ஸ்டைலிஷ், க்யூட் திரைக்கதை... பாடல் காட்சிகளில் குஷி விஜயை வைத்து க்ராபிக்ஸ் பண்ணியிருக்கிறார்களோ என சந்தேகம் எழும் அளவிற்டகு க்யூட் ஆக இருக்கிறார்.

 காஜல் ஐ மிஸ் யூ....

நான் மிகவும் ரசித்த காட்சிகள்....

1) ஹாஸ்பிடலை விட்டு தப்பும் தீவிரவாதியை துரத்தும் அசத்தல் ஸ்டைல்
2) தப்பிக்க விட்டவனை கொலை செய்யும் லாவகம்
3) புதுக்கோட்டை ராணுவவீரரின் கதை - ஒரு நொடி சிலிர்ப்புடன் கூடிய ஒரு சொட்டு கண்ணீர் வந்து விட்டது
4) 12 பேர் அட்டாக்
5) அந்த அமர்க்களமான இண்டெர்வல் ப்ளாக்
6) தங்கச்சியை கடத்தியவர்களை துவம்சம் செய்யும் ருத்ர தாண்டவம்
7) க்ளைமாக்ஸில் வில்லனை தூண்டி விடும் சீன்

விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான படம். மற்றவர்கள் கொண்டாடும் படமாக அமைந்ததுதான் சூப்பர்....

ஏ.ஆர்.முருகதாஸ் 7ம் அறிவில் விட்டதை துப்பாக்கியில் பிடித்து விட்டார்... ஒரே ஒரு ரிக்வெஸ்ட் இனிமேலும் ஹாரிஸிடம் கூட்டணி வைக்காதீர்கள்.... ஹாரிஸூக்கு உடனடி தேவை ஐந்து வருட கட்டாய ஓய்வு

Sunday, November 18, 2012

பாலா சாஹேப் தாக்கரே



லெஜண்டரி மேன்... மும்பையில் சனிக்கிழமை நாலு மணிவாக்கில் தாக்கரே மறைந்து விட்டார் என்று அதிகாரபூர்வ செய்தி வெளியாகிறது... ஐந்து மணிவாக்கில் மும்பையே அமைதியாகிவிட்டது... மூச்சு விடும் சப்தம் கூட கேட்காத நிசப்தம் மும்பையில்... ஞாயிறும் அதே நிலைமைதான்... வீட்டு காம்பெளண்டுகளில் விளையாடும் குழந்தைகளின் சத்தம் கூட கேட்கவில்லை... அமைதி.. அமைதி... அப்படியொரு அமைதி.... எந்த சூழ்நிலையிலும் இயல்பை மாற்றாத மும்பை நிஜமாகவே ஸ்தம்பித்து விட்டது....

இறுதி ஊர்வலம் திட்டமிட்ட படி திட்டமிட்ட பாதையில் அமைதியாக முடிந்ததது. இறுதி சடங்குகளும்தான். சுமார் 20 லட்சம் பேர் திரண்ட கூட்டத்தில் வன்முறை வெடிக்காமல் அமைதி காத்ததே அந்த மாபெரும் மனிதரின் வெற்றி...

மும்பை போன்ற மாநகரில் இவ்வளவு மக்களை கவர்ந்திருக்கிறார் என்றால் நிஜமாக அவர் ஒரு மாபெரும் மனிதர்தான்....


ஆத்மா சாந்தியடைக‌

Monday, November 12, 2012

தீபாவளி வாழ்த்துக்கள்



அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்

Thursday, November 8, 2012

தமிழன்



தமிழரில் ஒரு பிரிவினர் மறுபடி மறுபடி முட்டாள்கள், கத்து குட்டிகள் என்று ஃப்ருவ் செய்து கொண்டிருக்கிறார்கள்.... நக்கலாக கடந்து செல்லும் விளம்பரத்திற்கெல்லாம் ஆர்பாட்டம் கண்டனம் என்று கதறி கொண்டிருக்கிறார்கள்.... மற்ற மாநிலங்களில் இருக்கும் சர் நேம் கான்செப்டுக்கு, தமிழ் நாட்டில் ஜாதி சாயம் பூசி மெழுகி அழுது கொண்டிருக்கிறார்கள்... சாதிக்கும் சர் நேமுக்கும் வித்தியாசம் தெரியாத பதர்களுக்கு, டில்லியை பொறுத்தவரை சவுத் என்றாலே மதராஸி, மதராஸி என்றாலே அய்யர் என்பது இன்னும் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்...


வடக்கில் பெயர் கான்செப்டிலேயே சர் நேம் மிகவும் அவசியம்... மும்பையில் இருக்கும் தமிழர்களின் குழந்தைகளின் பெயர்களில் நாடாரும், அய்யரும், பிள்ளையும் கலந்திருக்கும்... அவர்களை பொருத்த வரை அது சர் நேம்தான்... ஜாதி அல்ல... அந்த பக்குவம் தமிழர்களுக்கு எப்போது வரும்???

Monday, November 5, 2012

இரங்கல்



எனக்கு சிக்கன் மசாலா மற்றும் மட்டன் பிரியாணி செய்ய டிவி மூலம் கற்று கொடுத்த திரு ஜேக்கப் அவர்கள் மறைந்து விட்டார். அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

Thursday, November 1, 2012

தாண்டவம்



வயசான விக்ரம்.... வயசு பொண்ணு அனுஷ்கா, எமி... டிரையான சந்தானம்... மற்றும் பலர் ஆடும் தெருக்கூத்துதான் இந்த தாண்டவம்....

என்னதான் லண்டன், கிராமம் அது இதுன்னு ஜல்லியடிச்சாலும் வலுவான கதை இல்லாததால் ரொம்ப பரிதாபமாக இருந்தது பாக்குறதுக்கு.... அதுவும் விக்ரம் இந்தியாவின் டாப் 5 ஆபிசர்ர்ர்ர்ர்ர்னு சல்யூட் அடிக்கும் காட்சியில் விழுந்து விழுந்து சிரித்தேன்... அனுஷ்கா வரும் போர்ஷன் மட்டும்தான் படத்தில் கொஞ்சமே கொஞ்சம் சுவாரஸ்யமான போர்ஷன்... தம்பி ராமையா 'தப்பாச்சே' என புன்னகைக்க வைக்கிறார்


Wednesday, October 24, 2012

ட்விட்டர் பகீர்



சமீபத்தில் ட்விட்டரில் நடந்து வரும் சர்ச்சைகளை காணும் போது தமிழர்கள் குழாயடி சண்டை மனநிலையிலிருந்து இன்னும் வெளிவரவில்லை என்பது ஊர்ஜிதமாகிறது....

கல் தோன்றி மண் தோன்றி முன் தோன்றா மூத்த குடி என்று பீற்றி கொள்ளும் சமூகத்தில்தான் மன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது... நான் குறை சொல்வது இருதரப்பையுமேதான்.... ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால் வெளியேறியிருக்கலாம்.... மற்றொரு டீம் இத்தனை மோசமான வார்த்தை தாக்குதல் நடத்தி இருக்க தேவையில்லை....

மேலும் ஒரு டெக்னாலஜியை மோசமாக பயன்படுத்துவதில் தமிழனுக்கு நிகர் தமிழந்தான்... ஜாலியாக இருக்க வேண்டிய இடத்தில் சீரியஸாகவும்... சீரியஸாக இருக்க வேண்டிய இடத்தில் காமெடி பண்ணுவதிலும் அவனை அடித்துக் கொள்ள ஆளே இல்லை எனலாம்.

எல்லா க்ரூப்பிலும் ஜாதி எளிதாக நுழைந்து விடுகிறது... ஜாதி வெறியை தணிக்க பெரியார் நடத்திய போராட்டம் இம்மி அளவிலும் பயன் தரவில்லை... ஜாதிகள் இல்லை நாமெல்லாம் மனிதர்கள் என்ற மனநிலை எந்த காலத்திலும் வரப் போவதில்லை...

Sunday, October 14, 2012

மாற்றான்



செம மொக்க படம்... கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன், இசை என்று எல்லா கோர் ஏரியாவிலும் சொதப்போ சொதப்புன்னு சொதப்பிய படம்....



கண்டிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம். வழிப்பறிக் கொள்ளையர்களாக நேரடியாக பீகார் மாநிலத்தினரை சுட்டிக்காட்டுவது... வெகுஜன படம் சென்ஸாராகும் போது சென்ஸார் அதிகாரிகள் என்னத்த புடுங்கிகொண்டிருந்தனரோ தெரியவில்லை...



சூர்யாவுக்கு அறிவே கிடையாதா? இப்பதான் ஏழாம் அறிவு என்று ஒரு ஜெனடிக்ஸ் சம்பந்தமான படம் வந்தது. தொடர்ந்து அதே ஜென்ரேயில் படம் செய்யும் முட்டாளா சூர்யா... மொத்ததில் ரூபாய் 500 செலவு செய்த என்னை மாதிரி குடும்பஸ்தனுங்க வயித்தெரிச்சல வாங்கி கட்டிகிட்டாரே... நாலு அட்வடைஸ்மெண்ட் நடிச்சு ரசிகர்களின் பணத்த திருப்பி கொடுத்து எங்க வயித்துல பால வார்த்தார்னா நல்லாருக்கும்....

kv ஆனந்த் - மூன்று வெற்றி படங்களுக்கு அப்புறம் ஒரு ரெண்டு வருஷம் ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்த படம் கொடுத்திருக்கலாம்.... தமிழ் நாட்டில் எஸ்.எஸ்.ராஜமவுலி போல ஒரு மாஸ் டைரக்டர் உருவாகவே மாட்டார் போல இருக்கு.... பாக்குறவனல்லாம் பைத்தியக்காரன்னு நினைச்சாதான் இப்படி ஒரு திரைக்கதை எழுத முடியும்..

காஜல் - பொண்ணு அழகா இருந்தாலும் கேரக்டர் ஸ்கெட்ச் மோசமா போனதுதான் பாவம்...  ஆனாலும் லவ் டிராக் இவ்ளோ சொதப்பலா இருந்திருக்க தேவையில்லை....

பாடல் - ரெண்டு பாட்டு ஓகே..

இசை - ஹாரிஸ் ஜெயராஜ உக்ரெயின் மெண்டல் ஹாஸ்பிடல்ல சேத்து ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம்.. அப்படி ஒரு பைத்தியக்காரத்தனமான பிண்ணனி இசை.

Wednesday, October 3, 2012

காந்தி



பலவருடங்களாக ஹிந்தியிலோ, ஆங்கிலத்திலோ புரியாமலே பார்த்த படம், நேற்றுதான் கலைஞர் டிவியில் தமிழில் புரிந்து பார்த்தேன்...

மாகாத்மாவின் வரலாறை மூன்று மணி நேரத்தில் ஆவணபடுத்ததுவது என்பது கடலை டம்ளரில் அடைப்பதற்கு சமம்... ஆனால் ஒரு இயக்குனராக அப்பணியை சிறப்பாக செய்திருக்கிறார்...

மகாத்மா... கொண்டாடியதும் மக்களே... கொன்றதும் மக்களே.... கொன்று கொண்டிருப்பதும் மக்களே...

Wednesday, September 12, 2012

கண்டனம், சபாஷ்

கண்டனம்

கார்ட்டூன் என்ற பெயரில் தமிழக முதல்வரையும் இந்திய பிரதமரையும் அருவருக்கதக்க விதத்தில் கேலி செய்துள்ள இலங்கை கார்டூனிஸ்டுக்கும் அதை ஊக்குவிக்கும் விதத்தில் செயல்படும் இலங்கை அரசுக்கும்... பாகிஸ்தானோடு இத்தனை வீராப்பு காட்டும் இந்தியா இலங்கை விஷயத்தில் ஏன் இத்தனை மெத்தனம் காட்டுகிறது என புரியவில்லை.. சீனாவின் அச்சுறுத்தல் காரணம் என்றால் சிரிப்புதான் வருகிறது... வடக்கே பல்லாயிரம் கிலோ மீட்டர் எல்லையில் கொடுக்க முடியாத அச்சுறுத்தலையா இந்த இலங்கையிலிருந்து கொடுத்து விட முடியும்... இனியும் தாமதிக்காமல் இலங்கையின் அட்டகாசத்தை தடுக்க முயற்சிக்காவிடில் தமிழகத்தின் நிலை இன்னும் பரிதாபமாகி விடும்.... துபாயிலும் கேரளாவிலும் மீனவன் செத்தால் எடுக்கும் முயற்சிகளில் ஒரு சதவீதம் கூட தமிழ் மீனவர்கள் சுடப்படும் போது எடுக்க படுவதில்லை...

சபாஷ்

இந்திய கார்டூனிஸ்ட் அரெஸ்ட் செய்திகளை பார்த்த போது ஒன்றும் புரியவில்லை... ஆனால் அவர் வரைந்த கார்டூனை பார்த்த போது அவனது விரல்களை வெட்டி அனுப்பினால் தேவலாம் என்று தோன்றுகிறது... என்னா ஒரு தெனாவட்டு இருந்தால் தேசிய அடையாளங்களை அவமதித்திருப்பான்... என்னதான் இருந்தாலும் எதிர்ப்பிற்கான‌ முறை இதுவன்று...

Monday, August 27, 2012

அட்ட கத்தி


முதல் நாளே பார்த்த முதல் லோ பட்ஜெட் படம்.... சுதந்திர தினத்தன்று சென்னையில் இருந்ததால் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 10 பேர் சென்றோம்....

படம் சூப்பர்... இன்றைய தமிழ் சூழலுக்கு தேவையான படத்தை கொடுத்த இயக்குனருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

சிலாகிக்க பல காட்சிகள் உள்ளன

ஹீரோ,4 நண்பர்களோடு பாரில் தண்ணியடிக்கும் சீனோ, தம்மடிக்கும் சீனோ இல்லை....  ரூட் விடும் பெண் 'அண்ணா' என்றழைத்ததும் கூல் டிரிங்க் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொள்கிறான்....

காலேஜ்ல ரூட்டு தல ஆனதும் தம்மடித்தோ, பீரடித்தோ கொண்டாடவில்லை... மாறாக போதை பொருள் யூஸ் பண்ணுபவர்களை அடிக்கிறான்....

மிக எளிமையாக காதலிக்கிறான்... காதலின் வலியை புரிய வைக்க அவனும் நொந்து நம்மையும் நோகடிக்கவில்லை....

காதல் கவுந்தாலும் தற்கொலை, தாடிவளர்ப்பு, ஒயின்ஷாப் என்று அலையாமல் வாழ்க்கையை ஓட்டி விடுகிறான்....

இன்றைய சூழலுக்கு தேவையான மிக சிறப்பான படம்.... தண்ணி, தம் இல்லாமல் இள வயசு பசங்களை வைத்து ஒரு சுவாரசியாமான படம் தர முடியும் என்று அழுத்தந்திருத்தமாக நிருபித்த இயக்குனருக்கு எப்படி புகழ்ந்தாலும் தகும்....


Monday, July 16, 2012

மண்டே

மண்டே


எனது E7 பைபேக் செய்துவிட்டு S3 வாங்க வேண்டும் என்று மனைவியிடம் சொன்னேன். வாங்கி 15 மாசந்தானே ஆகுது அதுக்குள்ளயா? என்றாள்....

குழந்தையே 10 மாசந்தான் வயித்துக்குள்ள இருக்கு... மொபைல்ல 15 மாசம் வச்சிருக்க முடியுமா என்றேன்



மாமனாரிடம் இரவு ஷிரடி செல்கிறோம் என்றேன். செகண்ட் ஷோவா?? யார் நடிச்சது? என்றார்


மச்சானுக்கு வயசு 28... பொண்ணு பாக்க தொடங்கயிருக்கிறோம்.... 35 வயசுல பொண்ணு பாருங்க என்கிறான்... அவன் ஒரு சமீரா ரெட்டி ரசிகன்....


தடையற தாக்க படம் பார்த்தேன்  - ஒரு க்ளீன் ஆக்ஷன் மூவி வித் பர்பெக்ட் லவ் எபிசோட்.... விஜய் நடித்திருந்தால் பல உயரம் சென்றிருக்கும்....

பில்லா 2 விமர்சனங்களால் பாதிக்கப்பட்டதால் போகவில்லை... சகுனி பார்த்தேன்... டிவியில் பார்க்க நன்றாகத்தானிருந்தது....

Sunday, July 8, 2012

நான் ஈ படம்னா இது படம்... மத்ததெல்லாம் பப்படம்.... ராஜமெளலி தான் ஒரு கிங் என்பதை மறுபடியும் நிருபித்து விட்டார்... ஒரு அருமையான திரைக்கதையின் ஆரம்பமாக இது ஒரு பெட் டைம் ஸ்டோரி என்றுதான் ஆரம்பிக்கிறார்.. ஆனால் ஒரு பத்து நிமிடங்களிலேயே திரைக்கதை நம்மை ஆக்கிரமித்து விடுகிறது... மூணே மூனு லைன் வசனத்தில் வில்லனின் கேரக்டரைஷேஷன் புரிந்து விடுகிறது... சூப்பர் ஸ்டாரின் 'சிங்கம் சிங்கிளாத்தான் வரும்' வசனம் மிகச்சரியாக ப்ளேஸ் செய்யப்பட்டுள்ளது.... விமர்சனம் படிக்காமல் தியேட்டரில் சென்று பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய விஷூவல் ட்ரீட் தான் இந்த ஈ...

Wednesday, June 20, 2012

கலாம்

பதவி வெறி பிடித்த முன்னாள் சாதனையாளர்.... எல்லோரும் ஆதரித்தால் போட்டியிடலாம்ங்கிற மாதிரி வார்த்தைய வுட்டுட்டு அப்புறம் காங்கிரஸ் வேட்பாளர அறிவிச்சதும் ச்சீ இந்த பழம் புளிக்கும்ங்ற ரேஞ்சிக்கு போட்டியிட போவதில்லை என்று அறிக்கை வேற.... கலைஞருக்கு, அன்னாவுக்கு அப்புறம் ஒரு பெஸ்ட் காமெடியனாக ஆகி விட்டார்... கலாமுக்குதான் பாரத ரத்னா மற்றும் ஒருமுறை ஜனாதிபதி பதவியும் கொடுத்தாகிவிட்டதே.... இன்னும் என்ன கனவு வேண்டிகிடக்குது... பேசாம அமெரிக்க ஜனாதிபதியாக கனவு காண வேண்டியதுதானே.... இல்லாட்டி சன் டிவில தினமும் ஒரு அறிவியல் தகவல் சொல்லாம்... சில பெருசுகள நெனச்சாலே எரிச்சல் வர்ற மாதிரி ஆகுது... கலைஞர், அன்னா இந்த வரிசைல வாலண்டியரா வந்து ஏறியிருக்கும் கலாம் கூடத்தான்... ஆனா கலைஞர் எல்லாம் ஜனாதிபதி ஆகல.. ஆகியிருந்தா ராஷ்ட்ரபதி பவர்... கலைஞர் அறிவாலயமா மாத்தி டிரஸ்டுக்கு கொண்டாந்திருப்பாரு...

Monday, June 4, 2012

செஸ்

விஸ்வநாதன் ஆனந்த்.... உலக சாம்பியன்... வெற்றி என்பதை தலைக்கு ஏற்றாத சாதனை தமிழர்களில் ஒருவர்... நாமெல்லாம் ஒரு சின்ன விஷயத்துக்கே ஆடும் போது சாதிச்சிட்டு சைலண்டா இருக்கிற இவர பாத்தா என்னமோ பண்ணுது.... உலகத்திற்கு இந்தியாவின் அடையாளமாய் ஆகியிருக்கு ஆனந்த்... வாழ்த்துக்கள்.... கிரிக்கெட்டை கட்டி அழும் நாம் இவரோட மதிப்ப எப்போ உணர போறோம்...

Monday, May 21, 2012

கப்பார் சிங்

அடி தூள்.... பின்னி பெடலெடுத்திருக்கிறார் இயக்குனர் ஹரீஷ் ஷங்கர்.... பவன் கல்யாண் மாஸூக்கு 10 வருஷத்துக்கு அப்புறம் செம தீனி... ரீமேக் என்பது சாதாரண விஷயமல்ல... அதில் மண் மணத்திற்க்காக மாற்றி அமைத்து க்ரவுண்ட் அவுட் சிக்ஸர் அடித்திருக்கிறார்கள் இயக்குனரும், நடிகரும்.... ஒக்கடு, போக்கிரி, அருந்ததி, மகதீராவுக்கு அப்புறம் ஒரு அதிரி புதிரியான தெலுகு பம்பர் ஹிட் மூவிதான் இந்த கப்பார் சிங்.... கில்லி, சந்திரமுகி, வேலாயுதத்க்கு அப்புறம் ஒரு ப்ராபர் ரீமேக் மூவிக்கு உதாரணம் இந்த கப்பார் சிங்... டோண்ட் மிஸ் இட்....

Sunday, May 6, 2012

வழக்கு எண் 18/9

வழக்கு எண் 18/9 ஹேட்ஸ் ஆஃப் திரு.பாலாஜி சக்திவேல்.... படம் பார்த்து விட்டு வேறொன்றும் சொல்ல தோன்றவில்லை...இதுவரை நான் பார்த்த படங்களில் 'அஞ்சாதே' வைத்தான் ஒரு பக்கா ஸ்கீரீன்ப்ளேவுக்கு ரெஃபர் செய்து கொண்டிருந்தேன்.... அசால்ட்டாக அந்த இடத்தை பிடித்து விட்டது உங்கள் படம்.... ரொம்ப நாள் கழித்து நல்ல படம் பார்த்த திருப்தியை தந்துள்ளீர்கள்... நன்றி

Tuesday, April 24, 2012

OK OK

படம் பார்த்தோம்.. மும்பையில் ஹவுஸ்ஃபுல்.... எல்லோரும் விமர்சித்து விட்டதால்... என் விமர்சனம் டபுள் OK

Wednesday, April 11, 2012

பூகம்பம்

பூகம்பம்

நேற்று ஏற்பட்ட பூகம்பத்தால் எனக்குள் சில கேள்விகள்

1) போன அம்மா ஆட்சியால் இயற்கையே கொந்தளித்து தமிழ்நாட்டை ஒரு காட்டு காட்டியது.... ஆட்சியின் கடைசி காலத்தில்

2) இம்முறை ஒரு வருடத்துக்குள்ளாகவே ஒரு வார்னிங் பெல் அடித்திருக்கிறது.... அம்மா இனியாவது இயற்கைதான் பெரியது என்று உணர்ந்து மக்களுக்காக ஒரு நாலு வருடமாவது நல்லாட்சி புரிவார்களா?????

3) என்னதான் சொந்த வீடு, வாசல், கணக்கிலடங்கா சொத்து என்றிருந்தாலு இயற்கையின் முன் எல்லோரும் நடு ரோட்டில்தான் நிற்க வேண்டியிருக்கிறது... அப்ப இவர்கள் பணக்காரர்களா? இல்லை அல்ரெடி நடுரோட்டில் இருப்பவர்கள் பணக்காரர்களா?

4) நாம் நிஜமாகவே சுனாமி, பூகம்பம் முதலான இயற்கை பேரிடர்களை சமாளிக்கும் அளவு முன்னேறி விட்டோமா?

Monday, March 26, 2012

கூடங்குளம்

சமீப காலங்களில் கூட்டம் கூட்டமாக மஞ்சக்கொடிய தூக்கிகிட்டு கூடுற வழக்கம் அதிகமாயிருச்சி... உலக அளவில் லிபியா, அமெரிக்கா, தேசிய அளவில் அன்னா சீ, தமிழகத்தில் முல்லை பெரியார், கூடங்குளம்....

கூடங்குளம் கூட்டம் சற்று வித்தியாசமானது... மின்சாரமே இல்லாத மாநிலத்தில் மின்சார உற்பத்தி வேண்டாம் என்று சமானிய மக்கள் கூடுவது விசித்திரமாக இருந்தாலும்.... ஜெ, கருணா, தோழர்கள் என எந்த அரசியல் கட்சியின் தூண்டுதலும் இன்றி இத்தனை மக்கள் இத்தனை நாட்கள் போராடுவது ஆச்சரியம்... தின'மலம்' போன்ற பத்திரிக்கைகள் மேற்கொண்ட காழ்புணர்ச்சி தாக்குதல், மத்திய அரசின் அடாவடிகளையும் சமாளித்தது பெரிய விஷயம்...

மாண்புமிகு புரட்சி தலைவியின் அறிவிப்பையும் மீறி போராடும் இவர்களை சமாளிக்க அரசு வன்முறை ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது... ஒரு வருட டாஸ்மாக் வருமானத்திலேயே அணு உலையை மூடினாலும் ஏற்படும் நஷ்டத்தை சரி பண்ணிவிடலாம் என்பதையும் மீறி அம்மா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.... அதுவும் இடைத்தேர்தல் முடிந்த அடுத்த நாளே..... மக்கள் என்ன பாவம் பண்ணினார்கள்....

ஜனநாயக சர்வாதிகாரம் என்பது இதுதான்... சுதந்திர நாடு என்பது வெறும் பேச்சளவில்தானா?.. இல்லை சுதந்திரத்தின் விளக்கம் புரியாமல் நாம்தான் அடிமைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?....

காங்கிரஸ தப்பு சொல்லியும் பிரயோஜனமில்லை... ஏன்னா வரிந்து கட்டி முன்னேற வேண்டிய பிஜேபி பிட்டு படம் பார்க்கிறதிலேயே நேரத்த செலவழிக்குது... மூணாவது அணி அமைஞ்சா அதவிட கெட்ட நேரம் எதும் கிடையாது... அதனால காங்கிரஸ விட்டா வேற கதியும் இல்ல...

ஆனா.. ஜெ போன்ற கேடு கெட்டவர்கள் அரசியல விட்டு துரத்தப்பட வேண்டும்... ஒன்னு ஒயுங்கா முன்னாடியே கூடங்குளம் கூட்டத்த கலச்சிட்டு மின் உற்பத்திய தொடங்கிருக்கனும்... இல்லாட்டி சட்டசபைல நிறைவேத்துன தீர்மானத்தயாவது மதிக்கனும்... ரெண்டும் இல்லாம இடைத்தேர்தல் முடிஞ்சதும் அறிவிப்ப வெளியிடறது என்னா ஒரு வில்லத்தனம்....

கூடங்குளம் மற்றும் தமிழர்களுக்காக இல்லாத கடவுளை வேண்டுவதை தவிர வேறு வழி தெரியாத...

ஒரு தமிழன்

Tuesday, March 20, 2012

தமிழன்

தமிழன நடுரோட்ல நிக்க வச்சி சாணில முக்கி செருப்பால அடிச்சாலும் திருந்தவே மாட்டானுவ என்பது இடைத்தேர்தல் முடிவுகளில் தெரிகிறது...

நாயடி, பேயடி, காயடி பட்டாலும் புத்தி தெளிய மாட்டேங்குதே.... ஜெயிக்க வச்சாலும் ஒரு நாமினல் வித்தியாசத்தில ஜெயிக்க வச்சா பரவால்ல... இவ்ளோ வித்தியாசத்தில ஜெயிக்க வச்சா.. அந்தம்மா சும்மாவே ஆடும்... சலங்கய கட்டி உறுமி மேளத்தயும் அடிச்சா..... தாங்குறானுவளே தமிழனுங்க... என்னா ஒரு சகிப்பு தன்மை....

ஜனநாயகத்தில் வென்றவரை வாழ்த்த வேண்டும். எனவே முத்து லட்சுமிக்கு வாழ்த்துக்கள்....

இருந்தாலும் தமிழனுவள நினைச்சா வாந்திதான் வருது....

தமிழர்கள்

தமிழர்கள் நிஜமாகவே கொடுத்து வைத்தவர்கள்....

வெள்ளிக்கிழமைகளில் புது படம்... புதுபடம் இல்லாட்டினாலும் பழைய படம் ரிலீஸ் ஆகுது... அதையும் பாத்துட்டு சந்தோஷமாக பதிவெழுதும் பதிவர்கள்...

16 மணி நேர ஓய்வு.. எட்டு மணி நேர வேலை...( கரண்ட் கட்டால் )... அரசு மதுக்கடைகள்... ஒவ்வொரு ஊரிலும் வெஜ், நான் வெஜ் என கலந்து கட்டி அடிக்கும் உணவகங்கள்.... அதிகாலை நாலு மணிக்கே உளுந்து வடை கிடைக்கு டீக்கடைகள்.... இரவு 3.59 வரை புரோட்டா கிடைக்கும் இரவு உணவகங்கள்...

வடிவேலு, விவேக், சந்தானம் என திரை காமெடியன்கள், வைகோ, ராம்தாஸ், திருமா, சீமான் என அரசியல் காமெடியன்கள், படையப்பா.. நீலாம்பரி டப் ஃபைட்டுக்கு இணையான கருணா ஜெ சண்டை... எத்தனை என்டெர்டெயின்மென்ட்....

இலவச கல்வி,இலவச அரிசி, இலவச லேப்டாப், இலவச ஆடுமாடு, இலவச வீடுகள், இலவச உணவு, இலவச சைக்கிள், இலவச செருப்பு - ஏழை என்பதற்கு அர்த்தமே தெரியாத மாநிலத்தில் வசிக்கும் தமிழர்கள் எத்தனை அதிர்ஷ்டசாலிகள்...

எனக்கு தெரிந்து 70 தமிழ் சேனல்கள் இருக்கின்றன. உள்ளூர் சேனல்கள் எத்தனை என்று தெரியவில்லை... சீனா, இந்தி, ஆங்கிலம் போன்ற அதிகம் பேர் பயன்படுத்தும் மொழிகளில் கூட இத்தனை சேனல்கள் இருக்குமா என்று தெரியவில்லை... கொடுத்து வைத்த தமிழர்கள்....

ஒவ்வொரு நாளும் எப்படியாவது ஒரு தலைப்பு செய்தி கிடைத்து விடுகிறது... ஒரு பரபரப்பு செய்தியும் கிடைத்து விடுகிறது....

பிறந்த குழந்தை முதல்... சாக கிடக்கும் பெருசு வரை ஏதோ ஒரு என்டெர்டெயின்மெண்ட் கிடைத்து விடுகிறது...

தமிழ்ர்கள் நிஜமாகவே அதிர்ஷ்டசாலிகள்தான்

Sunday, March 11, 2012

நானும் பிரபல பதிவரும்

நானும் பிரபல பதிவரும்

நேற்று ஒரு போன் வந்தது.... நான் நன்றாக எழுதுவதாகவும் ஜாக்கியை கலாய்ப்பதாகவும் பேசினார்கள்...
எனக்கு ஒன்றும் புரியவில்லை.. இருந்தாலும் பேசி விட்டு வைத்தேன்...

இன்று காலை கூகுளாண்டவரிடம் செக் செய்த போதுதான் தெரிந்தது பிரபல பதிவர் என்ற பெயரில் ஜாக்கியின் ஸ்பூஃப் சைட் ஒன்று இருக்கிறது.... நான் அவன் இல்லை.... என்று தெரிவித்துக் கொள்கிறேன்...

பதிவு எழுதவே நேரம் இல்லை... இதுல இன்னொருத்தர் எழுதுறத கலாய்த்து எழுத வேண்டுமா???

Thursday, February 23, 2012

வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று பிறந்த நாள் விழா காணும் புரட்சி தலைவி அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Wednesday, February 22, 2012

வாழ்த்துக்கள்

வங்கி கொள்ளையர்களை என்கவுண்ட்டர் செய்த தமிழக காவல் துறைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.... இதுபோலவே மற்ற கொள்ளையர்களையும் சீக்கிரமே முடித்து விடுங்கள்....

Monday, February 20, 2012

வங்கி கொள்ளை

எல்லா நிறுவனங்களிலும்... Learning from Incident... தவறுகளில் தெரிந்து கொண்டது எனபது மிக முக்கியமான பாடம்... ஒரே தவறு மறுமுறை நடக்கக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருப்பார்கள்... அதனால்தான் இந்தியாவில் போபால் போன்ற விபரீதங்கள் 30 வருடங்களாக கண்ட்ரோலில் உள்ளன...

இது போன்ற கண்ட்ரோலில்தான் சட்டம் ஒழுங்கும் இருக்கிறது... ஆக்ஸிடன்ட், தனி நபர் குற்றங்கள் விதிவிலக்கு... உதாரணம்.. ரயில்/சாலை விபத்துக்கள்... கூடிவரும் மக்கள் தொகைக்கேற்ற நவீனம் அடையாததால் விபத்துக்கள் தொடர்கின்றன.... ஆனால் தொழிற்சாலை விபத்துக்கள் கண்ட்ரோலில் உள்ளன....

சமீபத்தில் பெருங்குடியில் வங்கி கொள்ளை, நேற்று கீழ் கட்டளையில் வங்கி கொள்ளை... நடந்தது சென்னைக்குட்பட்ட பகுதிகளில்... நிர்வாகம் என்ன செய்கிறது.... போன ஆட்சி சரியில்லை என்று அவர்களுக்கு தண்டனை அளித்தால் இந்த ஆட்சி மிக மோசமான நிர்வாகத்தை செய்து கொண்டிருக்கிறது....

எல்லா விதமான கொலை, கொள்ளை தினந்தோறும் நடக்கிறது... பேங்க் கொள்ளைகள் 30 வருடங்களுக்கு முன் கிராம வங்கிகளில் நடந்த விஷயம்... ஆனால் இப்போது சென்னையில் பரபரப்பான இடங்களில் சாதாரணமாகி விட்டது... learning from incident என்ன?

கிராமங்களில் வாழ வழியின்றி நகரங்களுக்கு குடி பெயரும் நிலை போய் சென்னை தவிர பிற நகரங்களில் பவர் கட்டால் வாழ முடியாமல் சென்னைக்கு குடி பெயரும் அபாயமான நிலை ஆரம்பித்து இருக்கிறது....

தமிழக மக்களை காப்பாற்ற வழியே இல்லையா???

Sunday, February 19, 2012

முப்பொழுதும் உன் கற்பனைகள்

சும்மாதானே உக்காந்துருக்கோம்னு தியேட்டருக்கு போனா சும்மா தெளிய தெளிய வச்சி அடிச்சி துரத்திட்டானுங்க...
திரைக்கதை எழுதும்போதே இது புட்டுக்கும்னு புரியாமலா எடுத்துருப்பானுக... அமலாபால் என்ற ஒரே ஒரு தேவதைக்காக மட்டும்தான் ஒரே ஒரு முறை மட்டும் படம் பாக்கலாம்... முரளி மகன் இன்னும் ஒரே ஒரு படம் இதே மாதிரி செலக்ட் பண்ணி நடிச்சா டிவி சீரியலுக்கு வந்து விடுவார்...

அமலா பால் மட்டும் இல்லன்னா 2 1/2 மணி நேரம் உக்கார்ந்து இருந்திருக்க முடியாது...

Thursday, February 2, 2012

தலைவர்கள்

தலைவர்கள்

ஜெ, கருணா வை விட மோசமான தலைவராக உருவாகிக் கொண்டிருக்கிறார் கேப்டன்.... தமிழகத்திற்கு வேறு ஆப்ஷனே இல்லாமல் போய் விட்டதா... தலைமை பஞ்சம் உருவாகியுள்ளது... தமிழ் நாடு இன்னும் பத்து வருடங்களில் பீகார், ஒரிஸ்ஸா நிலைமைக்கு போகும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன ....

முதலில் தமிழ் நாட்டின் அரசியல் தலைவர்களை பார்ப்போம்...

ஜெ - சொல்லத்தேவையில்லை
கருணா - சொல்லத்தேவையில்லை
விஜயகாந்த் - குடிகாரன் பேச்சுக்கு ஒரு உதாரணம்
ஸ்டாலின் - தலைமைக்கு தேவையான கட்ஸ் இல்லை
வைகோ - தொழிற்சங்க தலைமைக்கு சரியான நபர் மக்கள் தலைவராக முயற்சிப்பது ஆச்சரியம்
ராமதாஸ் - சாபதாஸாகவே இருந்தாலும் டாஸ்மாக் அவலங்களை பற்றி பேசும் ஒரே தலைவர்
திருமா, காங், எட்ஸட்ரா - சொல்லத்தேவையில்லை
கம்யூனிஸ்ட் - டீ சாப்பிடத்தான் லாயக்கு

மேலும் சிலர்
கேடி பிரதர்ஸ் - நினைத்தாலே பயமாக இருக்கிறது
கனிமொழி - ஜெ வெர்ஷன் டூ
அழகிரி - துக்ளக் தர்பார் வந்து விடும்

இந்த சார்டில் சிலர் விடுபட்டிருக்கலாம் ஆனால் இவர்கள்தான் அடுத்த பத்தாண்டிற்கான சாய்ஸ்.... என்ன செய்ய போகிறோம்.... சரியோ, தவறோ பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர், எம்ஜியார் போன்ற தலைவர்கள் ஏன் உருவாகவில்லை... கடைசி தலைவர் எம்ஜியார் உருவாகி 40 ஆண்டு காலம் ஆகி விட்டது...

அடுத்த 10 ஆண்டுகளில் நாம் என்ன செய்யப்போகிறோம்...

ஜெ மாறவில்லை

ஜெ மாறவில்லை...

ஜெ மாறவில்லை... மாற மாட்டார் என்று கூவுபவர்கள் ஒரு விஷயம் புரிந்து கொள்ள வேண்டும்.. ஜெ நல்லவர் ஆகிவிட்டார் என்று அவருக்கு ஓட்டு விழ வில்லை... அனைத்தும் கலைஞருக்கு எதிரான ஓட்டு... ஜெவை தவிர யாரும் தமிழ் நாட்டில் இல்லை என்ற நிலைமை....

இது தமிழ் நாட்டின் சாபம் என்றே சொல்ல வேண்டும்.... கடந்த 20 ஆண்டுகளில் கேரளா 4 முதல்வர்களையும், ஆந்திரா 7 முதல்வர்களையும், கர்நாடகா 9 முதல்வர்களையும் கண்ட காலகட்டத்தில் தமிழ் நாடு, ஜெ, கலைஞர், ஓபிஎஸ் என்ற மூன்று முதல்வர்களை மட்டுமே கண்டுள்ளது.. இதில் ஒபிஎஸ் கணக்கில் சேர்க்க முடியாது... ஜெ மற்றும் கலைஞர் தான்...

ஜெ மட்டும் அகம்பாவமின்றி கொஞ்சமே கொஞ்சம் நல்லாட்சி செய்திருந்தால் கலைஞர் தலை எடுத்திருக்க முடியாது... கலைஞருக்கு இருமுறை வாய்ப்பு வழங்கியது ஜெ தான்.... அதில் எந்த சந்தேகமும் இல்லை...

நேற்று சட்ட மன்றத்தில் ஜெவின் முக பாவனைகளை பார்த்த போது மிகவும் பயமாகி விட்டது... இன்னும் நாலு வருஷம் என்ன பாடு படுத்த காத்திருக்கிறார்களோ என்று

Tuesday, January 31, 2012

டெல் சர்வீஸ்

டெல் சர்வீஸ்

டெல் லேப்டாப் ஒன்று ஆர்டர் பண்ணியிருந்தேன்... ஆர்டர் டேட்டிலிருந்து எதிர்பார்க்கப்படும் டெலிவெரி டேட் வரை நெட்டில் அப்டேட் செய்து அதன் படி கரக்டாக டெலிவர் செய்திருந்தார்கள்... அவர்களின் சர்வீஸ் கேள்விப்பட்டிருந்தாலும் முதன்முறை நானே ஆர்டர் செய்து உணர்ந்தேன்....

hp 24 hr CTR pack ஒருவாரத்தில் சரி செய்தார்கள்.... IBM, HP போன்ற கம்பெனிகள் dell கற்க வேண்டிய பாடம் ஏராளம்,

Monday, January 23, 2012

மெளனகுரு

தியேட்டரில் மிஸ் செய்ததால் கொஞ்சம் லேட்டாக பார்த்த படம்.... அஞ்சாதேவிற்கு பிறகு எனக்கு பிடித்த மிக தெளிவான காட்சி அமைப்புகள் கொண்ட ஒரு நீட் மூவி.... மிக சிறப்பான படம்...

ஆனாலும் எனக்கு சில கேள்விகள்...

1) சினிமாவில் ஒரு சாதாரண ஆசாமி ஏன் கொஞ்சம் அரை கிறுக்கனாக சித்தரிக்க படுகிறார்... ராம் ஜீவா, கற்றது தமிழ் ஜீவா, மெளனகுரு அருள் போன்றோர்.... இப்படத்தில் அருள் ஒரு டெலிபோன் பூத் உடைக்கு சீன் எல்லாம் தேவையே இல்லை... ஒரு சதாரண ஸ்டூடண்ட் சதாரணமாகவே இருந்து ஒரு அசாதாரண நிலைக்கு கன்வெர்ட் ஆவதை போல் ஏன் திரைக்கதை அமைப்பதில்லை....

2) ரன் மாதவன் ஒரு நல்ல உதாரணம்... சதாரண ஸ்டூடண்ட்,,, அசாதாரண சூழ்நிலை... சிறப்பாக கையாளபட்டிருக்கும்.... அவன் அவன் பிரச்சனையை மட்டுமே எதிர் கொள்வான்... சூப்பர் ஹீரோ எல்லாம் ஆக மாட்டான்...

3) சாதாரண மனிதனின் வாழ்வை பிரதிபலிக்கும் படங்கள் தமிழில் இருக்கிறதா...

விவாதிக்கலாம்

வேட்டை

எல்லா காட்சிகளையுமே யூகிக்க முடிந்தாலும் நண்பனை விட சுவாரஸியமான படம்... மாதவன், ஆர்யா இருவருமே பக்காவாக ஃபிட் ஆகியுள்ளார்கள்... சமீரா ரெட்டி அமலாபாலின் அம்மாவாகவோ பாட்டியாகவோ நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அக்காவாக காஞ்சனா சரத்குமாரை நினைவூட்டினார்... வில்லன்கள் இருவருமே சும்மா டெரராக இருந்தார்கள்... பாடல்களில் பப்ப.. பப்ப பெப்பியாக இருந்தது... அமலாபால் அழகுபால்.... கொஞ்சம் ஆரோக்கியா பால் குடித்து புஷ்டியானால் நல்லா இருக்கும்.... நாசர் சில காட்சிகள் வந்தாலும் முத்திரை நடிப்பு....

முக்கியமாக மேக்கப்மேன் ஒர்ஸ்ட் சாய்ஸ்,.. எல்லோருமே ஏஷியன் பெயிண்ட் எக்ஸ்டீரியர் எமல்ஷன் அடிச்ச எபக்டில் ரோஸ் கலரில் தெரிந்தார்கள்.... வில்லனுக்கு டெரர் கண் மை வேறு....

Sunday, January 22, 2012

நண்பன்

நண்பன் படம் சார்பில் ஒரு பதிவர் ஒரு பெரிய பூகம்பத்தை கிளப்பி விட்டுட்டார்....

என் சார்பில் சில கருத்துக்கள்.... ஏற்றத்தாழ்வு என்பது உலகம் தொடங்கிய நாளில் இருந்து இருக்கிறது... மனிதன், மிருகம், மரம், செடி, கொடி, மண் எல்லாவற்றிலும் கலந்திருக்கிறது... சாதி மட்டுமல்ல... சாதீயே இல்லாத இடங்களிலும் வேறு விதமான் ஏற்றதாழ்வு இருந்து கொண்டுதான் இருக்கிறது....

ஆனாலும் சாதனையாளர்கள் இதையெல்லாம் மீறி வெளியே வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்... உலகளவில், தேசிய அளவில், மாநில அளவில் சாதனையாளர்கள் சாதி அடையாளங்கள் மீறித்தான் மிளிர்ந்து கொண்டிருக்கிறார்கள்....

சாதியினால் தற்கொலை செய்து கொள்ளும் முட்டாள்களை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது... நமது நாட்டில் மட்டும்தான் எதற்கும் அடுத்தவர் மேல் பழிபோடும் மனோபாவம் பெருகுகிறது.... எல்லாவற்றையும் ஒரு குறுகிய மனோபாவத்தில் சிந்திக்க பழகி விடுகிறோம்...

வாழ வக்கில்லாமல் செத்து தொலைபவர்கள் வெவ்வேறு உணர்ச்சிகளை கிளப்பி விட்டு விடுகிறார்கள்... இலங்கை தமிழர்களுக்காக, ஒய் எஸ் ஆர் ரெட்டிக்காக, தூக்கு தண்டனையை எதிர்த்து... இப்படி தற்கொலை செய்து கொண்டவர்கள் என்ன சாதீய பிண்ணனியிலா செத்தார்கள்.... நம்மவர்களுக்கு மேக்ஸிமம் டைம் பாஸே தற்கொலைதான்....

எளிமையாக சொல்வதென்றால் தற்கொலை செய்து கொள்பவன் என்ன காரணதிற்காக செத்தான் என்று ஆராய்வதை காட்டிலும் கிடைக்கும் காரணத்தை ஏற்றுக் கொள்கிறோம்.. அதான் பிரச்சனை....

இந்த சிக்கல்களுக்கு எளிய தீர்வு,,, மக்கள் தொகை கட்டுப்பாடு, அனைவர்க்கும் உணவு, அனைவர்க்கும் இலவச கல்வி.....

மக்கள் தொகை குறைந்தாலே பல சிக்கல்கள் தீர்ந்து விடும்...

Monday, January 16, 2012

நண்பன்

நண்பன்

அப்புறம் இன்னொரு முக்கியமான டெக்னிக்கல் விஷயம்....

படத்தோட ரீ ரிக்கார்டிங்லயே சிரிப்பு சத்தத்தயும் சேர்த்து வுட்ருக்கானுவ.... இங்க ஒரு இருபது பேர்தான் இருந்தோம் தியேட்டர்ல... ஆனா சிரிப்பு சத்தம் பயங்கரமா கேட்டுச்சி... உத்து கேட்டா ஸ்பீக்கர்லேர்ந்து வருது...

என்னா ஒரு டெக்னிக்.... டிவீ சிரிப்பு நிகழ்ச்சி டெக்னிக்க அப்படியே காப்பி அடிக்க ஷங்கர் தேவையா

Sunday, January 15, 2012

நண்பன்

நண்பன்

ஒஸ்தி பாத்த அதிர்ச்சிலேர்ந்தே தெளியாததனால நண்பன் பாக்காமலே இருந்தேன்.. நேத்து ஒரு நண்பன் டிக்கெட் போட்டு கூப்பிட்டு போனான்.....

விமர்சனம்லாம் வுட்ருலாம். சில கேள்விகள் மட்டுமே

1) இந்த படத்துக்கு ஷங்கர் தேவையா, ஜெயம் ராஜா, பிரபுதேவா போன்ற காப்பி பேஸ்ட் மாஸ்டர்ஸ் இருக்கும் போது ஒரு பெரிய டைரக்டர் எதுக்கு....

2) ஷங்கரே இந்த படத்த இயக்கினாரா.. இல்ல அஸிஸ்டண்ட்ஸ் இயக்கினாங்களா?

3) இலியானா வ புக் பண்றதுக்கு முன்னாடி போட்டோ ஷூட் பண்ணாங்களா. இல்லையா?

4) ஜெமினி ஏற்கனவே ரீமேக் என்ற பெயரில் முன்னாபாய கெடுத்து குட்டிசுவர் ஆக்கினது பத்தாதா?

5) 3 இடியட்ஸ் பாத்து ஒரு குட் ஃபீலிங்கும் நண்பன் பாத்து தலவலியும் வாந்தியும் வருதே ஏன்?

6) பிரபல பதிவர் எனும் போர்வையில் விமர்சனம் எழுதுபவர்கள் கவர் வாங்கிகிட்டு விமர்சனம் எழுதினாங்களா?




இந்த புத்தாண்டு சபதம்.... ஹிந்தி ரீமேக் படங்கள் பார்க்க மாட்டேன்... பார்க்க மாட்டேன்... இது சத்தியம்

Tuesday, January 3, 2012

புத்தக வெளியீடு

இன்று நண்பர் கேபிள் மற்றும் லக்கியின் புத்தக வெளியீடு,,,, இருவருக்கும் வாழ்த்துக்கள்

Sunday, January 1, 2012

2011 - ஒரு பார்வை

பிடித்த திரைப்படங்களில் எங்கேயும் எப்போதும் விட்டு விட்டேன்....

பிடித்த பாடல் - கோவிந்தா கோவிந்தா... சிக்கினி சமேலி....

பிடித்த பதிவர் சிறுகதைகள்... லக்கியின் கோமா... அதிஷாவின் வெள்ளிச்சங்கு,,,

பிடித்த பதிவர் நெடுங்கதைகள் .... அய்யனார்...மற்றும் கேணிவனம்....

பிடித்த புதுபதிவர் .... பிரபல பதிவர் மற்றும் மொக்கை ப்ளாக்....

மிகவும் சந்தோஷமான நாள்... டிசம்பர் 25.. காரணம் என் மகன் என்னை 'அப்பா' என்று அழைத்தான்....

மிகவும் வருத்தமான நாள்... மார்ச் 10... திருமண நாள்...

நொந்த பயணம்... திருவாருர் டூ தஞ்சாவூர் பஸ் பயணம்... ஹைடெசிபலில் 90 களின் பாடல்களை போட்டு என்னை விட்ருங்கடான்னு கதற விட்டார்கள்....

மறக்க முடியாத முகம்.... அதே பயணத்தில் கொரடாச்சேரி மாவீரன் ஒருவருக்கு திமுகவினர் சுமார் 2000 கட் அவுட் வைத்திருந்தனர் நாலாவது நினைவு அஞ்சலிக்காக,... அத்தனை கட் அவுட்டிலும் மாவீரன், மன்னவன்,, வெண்ணை, தொன்னை என்று இருந்ததே தவிர அவர் பெயர் இல்லை... இப்பவும் அந்த பேர் தெரியாத முகம் மனதில் இருக்கிறது,,,,