தமிழர்கள் நிஜமாகவே கொடுத்து வைத்தவர்கள்....
வெள்ளிக்கிழமைகளில் புது படம்... புதுபடம் இல்லாட்டினாலும் பழைய படம் ரிலீஸ் ஆகுது... அதையும் பாத்துட்டு சந்தோஷமாக பதிவெழுதும் பதிவர்கள்...
16 மணி நேர ஓய்வு.. எட்டு மணி நேர வேலை...( கரண்ட் கட்டால் )... அரசு மதுக்கடைகள்... ஒவ்வொரு ஊரிலும் வெஜ், நான் வெஜ் என கலந்து கட்டி அடிக்கும் உணவகங்கள்.... அதிகாலை நாலு மணிக்கே உளுந்து வடை கிடைக்கு டீக்கடைகள்.... இரவு 3.59 வரை புரோட்டா கிடைக்கும் இரவு உணவகங்கள்...
வடிவேலு, விவேக், சந்தானம் என திரை காமெடியன்கள், வைகோ, ராம்தாஸ், திருமா, சீமான் என அரசியல் காமெடியன்கள், படையப்பா.. நீலாம்பரி டப் ஃபைட்டுக்கு இணையான கருணா ஜெ சண்டை... எத்தனை என்டெர்டெயின்மென்ட்....
இலவச கல்வி,இலவச அரிசி, இலவச லேப்டாப், இலவச ஆடுமாடு, இலவச வீடுகள், இலவச உணவு, இலவச சைக்கிள், இலவச செருப்பு - ஏழை என்பதற்கு அர்த்தமே தெரியாத மாநிலத்தில் வசிக்கும் தமிழர்கள் எத்தனை அதிர்ஷ்டசாலிகள்...
எனக்கு தெரிந்து 70 தமிழ் சேனல்கள் இருக்கின்றன. உள்ளூர் சேனல்கள் எத்தனை என்று தெரியவில்லை... சீனா, இந்தி, ஆங்கிலம் போன்ற அதிகம் பேர் பயன்படுத்தும் மொழிகளில் கூட இத்தனை சேனல்கள் இருக்குமா என்று தெரியவில்லை... கொடுத்து வைத்த தமிழர்கள்....
ஒவ்வொரு நாளும் எப்படியாவது ஒரு தலைப்பு செய்தி கிடைத்து விடுகிறது... ஒரு பரபரப்பு செய்தியும் கிடைத்து விடுகிறது....
பிறந்த குழந்தை முதல்... சாக கிடக்கும் பெருசு வரை ஏதோ ஒரு என்டெர்டெயின்மெண்ட் கிடைத்து விடுகிறது...
தமிழ்ர்கள் நிஜமாகவே அதிர்ஷ்டசாலிகள்தான்